நுண்ணீர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்பமுறை. இதன் மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்தலாம். நுண்ணீர் பாசனத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் என இரண்டு முறைகள் உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான நுண்ணீர்பாசன நிறுவனத்தினை தேர்வு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பினால் இணையதளத்தில் பதிவு செய்யவும்.
நுண்ணீர் பாசனம் என்பது ஒவ்வொரு துளி பாசன நீரையும் சிக்கனமாகவும் திறம்படவும் பயன்படுத்தும் ஒரு சீரிய தொழில்நுட்ப முறையாகும். இத்தொழில்நுட்ப மூலம் உரங்களையும் பாசன நீர்வழியாக செடியின் வேர் பகுதிக்கு நேரடியாக செலுத்தலாம்.
நுண்ணீர் பாசனத்தில் சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்புநீர் பாசனம் என இரண்டு முறைகள் உள்ளது.
சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீதம்மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம்மானியம். அணுகவேண்டிய அலுவலர் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டகலை / வேளாண் உதவி இயக்குநர்
தேவைப்படும் ஆவணங்கள் :
குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகள் பதிவுசெய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் சொந்த கிணறு இல்லையெனில் அருகில் உள்ள உரிமையாளரிடமிருந்து தண்ணீர் பயன்படுத்த சம்மத கடிதம்.
புதிதாக நுண்ணீர்பாசன அமைப்பு அமைத்திட (New Area) நுண்ணீர் பரப்பை விரிவுப்படுத்திட (Extending the Area)